சவுமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு!

86542பார்த்தது
சவுமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு!
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அமமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம், மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி நடந்தது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. இதுகுறித்த தகவலறிந்த பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை, உரிய அனுமதி பெறவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி