ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு

54பார்த்தது
ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு
தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சதீஷ்குமார் (24). இவர் அருணாசல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் பொன்னாங்குடி அருகே பைக்கில் சென்ற போது சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் சதீஷ்குமார் உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி