புதிய பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர்

74பார்த்தது
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், காரைக்குடி மண்டலம் சார்பில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் 01 புதிய பேருந்தினை இன்று(செப்.,21) பொதுமக்களின் பயன்பாட்டிற்கென துவக்கி வைத்து தெரிவிக்கையில்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசின் நிதிநிலை நெருக்கடியினை சீர் செய்து, கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை பொதுமக்களின் தேவைகள் அறிந்து செயல்படுத்துவது, அரசின் முக்கிய கடமையாகும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் துரிதமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் சாலை வசதி இணைப்பு இல்லாத கிராமங்கள் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், நகரங்களுக்கு இணையாக அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி