திருப்புத்தூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

75பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா மெமோரியல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் நடப்பு கல்வியாண்டின் புதிய மாணவர்களின் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இம்முகாமில் தமிழகத்தின் பெரு நகரங்களான சென்னை கோவை மதுரை மற்றும் சுற்றுலா தலங்களாக விளங்கும் ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி, இன்ஜினியரிங், லேண்ட் சர்வேயர், கம்ப்யூட்டர் டெக்னாலஜி போன்ற பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தங்களது நிறுவனங்களில் பணியாற்ற பணி நியமன ஆணைகளையும் வழங்கினர். இருபாலரும் கலந்துகொண்ட இம்முகாமில் தங்களுக்கு வேலை வய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி