மெரினாவில் தடையை மீறி குளிக்க சென்ற மாணவர் பலி

75பார்த்தது
மயிலாப்பூர் விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த பெண் காவலர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், அதைமீறி, அவர்களில் 2 பேர் கடலுக்குள் இறங்கினர். பின்னர், பெரிய அலையில் சிக்கிய அவர்களில் ஒருவர் அலையின் தாக்கத்தால் கரை ஒதுங்கினார். மற்றொருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, மீட்புக் குழுவினர் அவரை சடலமாக மீட்டனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி