அரிவாள் மனையால் வெட்டி தாய் மாமனை கொலை செய்த மருமகன்கள்

70பார்த்தது
அரிவாள் மனையால் வெட்டி தாய் மாமனை கொலை செய்த மருமகன்கள்
சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை அருகே வசித்து வருபவர் அஷ்ரப் அலி இவர் தள்ளு வண்டியில் நிலக்கடலை வறுத்து வியாபாரம் செய்து வருபவர் இவரின் வீட்டின் அடுத்த வீட்டில் வசித்து வந்த இவரின் சகோதரிகளின் மகனான அப்துல் ரகுமான் மற்றும் ஆசிக் இருவரும் நேற்று இரவு ஏற்பட்ட பிரச்சனையில் அரிவாள் மனையால் தாய் மாமனான அஷ்ரப் அலியை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் அஷ்ரப் அலியின் தாய் சூரத் ஜெய்லானியும் பலத்த காயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ‌ அஷ்ரப் அலியை கொலை செய்த சகோதரி மகன்களான அப்துல் ரஹ்மான் மற்றும் அவரது சகோதரர் ஆசிக் இருவரையும் பிடித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர் தாய் மாமனை மருமகன்களை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி