அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி எஸ். பியிடம் மனு

4479பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பிரவலூரில் உள்ள சுந்தரவல்லி அம்மன் முளைப்பாரி திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை இருந்துவந்ததாக சொல்லப்படும்நிலையில் மந்தையில் ஒரு சமூகத்தினரை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த முன் விரோதம் காரணமாக ஒக்கூர் சென்ற சேகர் என்ற வரை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது திட்டமிட்டு தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி