ஶ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவிலில் பூச்சொரிதல் விழா

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் நேரு பஜார் கடை வீதி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவிலில் ஆனி மாத பூச்சொரிதல் விழா முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பூச்சொரிதல் விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு இவ்விழா அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கணபதி யாகத்துடன் விழா துவங்கி நடைபெற்றன முன்னதாக அம்மன் சன்னதி முன்பு யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு உதிரி புஷ்பங்களாக அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் அம்மனின் மூல மந்திரங்கள் நவக்கிரக ஹோமம் மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாகுதி அளிக்கப்பட்டனர் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றன இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன நிறைவாக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி