கண்மாய் உடையும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் அச்சம்

4234பார்த்தது
சிவகங்கை மாவட்டம். மானாமதுரை அருகே சின்ன கண்ணனூர் ஊராட்சியிலுள்ள சி. கரிசல்குளத்தில் 85 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன்மூலம் 250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய் கலுங்கு 7 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது.

இதையடுத்து, கலுங்கை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது கண்மாய் நிரம்பியுள்ளது. எனவே. சேதமடைந்த கலுங்கு அருகே கரை உடைந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் வகையில், விவசாயிகளே மணல் மூட்டைகளை வைத்து உடைந்த கண்மாய் கரையை பலப்படுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி