கீழடி அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுப்பு.

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் இன்று சுமார் மாலை 4 மணியளவில் உடைந்த நிலையில் செம்பு உலகத்திலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் இரும்பு, வெண்கல போன்ற கடின தன்மையில்லாத செம்பு பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும், இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது எத்தகைய பொருள், இதன் காலம் என்ன என்பது தெரிய வரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் கீழடியில் நாள்தோறும் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதுதொல்லியல் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி