விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்ட கால காதலர் பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என பிரியங்கா கூறியிருந்தார். சமீபத்தில் பிரியங்கா, பிரவீன்குமார் விவாகரத்து செய்தது உண்மைதான் என கூறப்பட்டது. இந்நிலையில் பிரியங்கா, தனது அம்மாவிற்காக, இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.