கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்தில் மாணவனின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஜூலை 13 அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பு வகுப்புகளை நடத்தி உள்ளது. வகுப்பு முடித்துவிட்டு 33 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இதில், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் கை துண்டாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்த 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.