இளம்பிள்ளை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா.

78பார்த்தது
சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி, ரெட்டிபட்டி , பள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள், வீரமாத்தி அம்மன் , வீரகாரன் சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கஞ்சமலை சித்தேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இதில் பசு மாடு , குதிரை உள்ளிட்ட தாரை தப்பட்டை முழங்க இளம்பிள்ளை வழியாக ஊர்வலம் வந்தனர்.

தொடர்புடைய செய்தி