தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். பணம் பட்டுவாடா செய்ய கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், நடுநிலையாளர்கள் மாற்று கட்சியினர் உள்ளிட்டவர்களை அந்தந்த வார்டு பகுதிகளில் துல்லியமாக கணக்கெடுத்து அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இருந்தனர். இந்நிலையில் வேட்பாளர்கள் தேர்தல் பொறுப்பாளரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர். அந்த பணத்தில் கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் என்று கணக்கிட்டு கொடுத்ததை முழுமையாக தராமல், அதில் பாதி தான் கொடுத்து வருகின்றனர். இதனால் வாக்காளர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.