சின்ன சீரகாப்பாடியில் புதிய வீட்டுமனைகள் விற்பனை தொடக்க விழா

80பார்த்தது
சின்ன சீரகாப்பாடியில் புதிய வீட்டுமனைகள் விற்பனை தொடக்க விழா
கிரீன் லைப் ஹோம்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் புதிய படைப்பாக சேலம் சின்ன சீரகாப்பாடியில் ஸ்ரீசெந்தூர்நகரில் வீட்டு மனைகள் விற்பனை தொடக்க விழா நடந்தது. வீட்டுமனைகளை நிர்வாக இயக்குனர்கள் திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், சேலம் குரங்குச்சாவடியில் கிரீன் லைப் ஹோம்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் பல ஆண்டுகளாக சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. சேலம் சின்னசீரக–ாபாடியில் ஸ்ரீசெந்தூர் நகரில் புதிய வீட்டுமனைகள் அனைத்து வசதிகளுடன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. எங்களது வீட்டுமனைகள் அரசு அங்கீகாரம் பெற்றது. இந்த வீட்டுமனைகளை அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2 படுக்கை அறைகளுடன் தனி வீடுகள் ரூ. 28½ லட்சத்தில் அமைத்து தர இருக்கிறோம். மேலும் தனித்தனி வீட்டுமனைகளாகவும், தனித்தனி வீடுகளாகவும் கட்டித்தந்தும் விற்பனை செய்யப்பட இருக்கிறது என்றார்கள்.

தொடர்புடைய செய்தி