மகுடஞ்சாவடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

56பார்த்தது
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய தலைவர் சொர்ணலதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் ராணி , செயலாளர் விஜயா, பொருளாளர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்துணவு மையங்களில் உள்ள காலியாக உள்ள 50, 000 பணியிடங்களை உடனே நிரப்பவும் , காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்ட ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும் என்றும் , சிறப்பு கால முறை ஊதியம் வாங்கும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு வழங்குவது போல ரூ. 6750 அகவிலைப்படிகளின் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 75 மையங்களில் காலியாக உள்ள 33 அமைப்பாளர்களுக்கும் , 12 சமையலர்களுக்கும், 72 உதவியாளர்களுக்கும் உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி