தேர்தலையொட்டி வணிக நிறுவனங்களுக்கு நாளை மறுநாள் விடுமுறை

81பார்த்தது
தேர்தலையொட்டி வணிக நிறுவனங்களுக்கு நாளை மறுநாள் விடுமுறை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, செயலாளர்கள் வர்க்கீஸ், இளைய பெருமாள், பொருளாளர் சந்திரதாசன், மளிகை வியாபாரிகள் சங்க பொருளாளர் செல்வக்குமார், பேரமைப்பின் மாநில துணை தலைவர்கள் சியாமளநாதன், ராஜேந்திரன், பொன்னுசாமி, இணை செயலாளர்கள் திருமுருகன், சுந்தர்ராஜ், தங்கவேல் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: -
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களும் தங்களது குடும்பத்தினருடன் சென்று வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி