சேலம்: புத்தாண்டில் கறி, கேக் சாப்பிட்ட வாலிபர் சாவு

7176பார்த்தது
சேலம்: புத்தாண்டில் கறி, கேக் சாப்பிட்ட வாலிபர் சாவு
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் நந்தகுமார் (வயது 23). பால் நிறுவனத்தில் லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஏற்கனவே விபத்தில் சிக்கியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் புத்தாண்டு தினமான நேற்று பகல் நேரத்தில் அதிக அளவில் கேக் மற்றும் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் கதறி துடித்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி