சேலம் அழகாபுரம் தாதகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி(48). அந்தப் பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவர் தொழில் ரீதியாக ரூ.20 லட்சம் கடன் வாங்கினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைப்பதற்காக தனது தாயிடம் வீட்டை விற்று விடலாம் என மூர்த்தி தெரிவித்தார். ஆனால், அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் விரக்தியில் இருந்து வந்த மூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுபற்றி அவரது மகன் மனோஜ்குமார், அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.