சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

2922பார்த்தது
சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் பா. ஜ. க. சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகத்தை பா. ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பா. ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியினர் தாரை, தப்பட்டை அடித்தும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறேன். இதுவரை 130 தொகுதிகளில் யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 104 தொகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்குள் யாத்திரை நிறைவு பெறும். பா. ஜனதாவின் 9 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 120 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல முறை வருகை தந்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த விழாவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் கட்சியினர் மற்றும் பொது மக்களுக்கிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. அவரை கைது செய்து 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் வைத்து சுற்றி அழைக்கழித்துள்ளனர். பொய்யான குற்றச்சாட்டுகளின்படி பொய்யான வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி