விபத்தில் பலியான தனியார் வங்கி ஊழியர் உடல் உறுப்பு தானம்

67பார்த்தது
விபத்தில் பலியான தனியார் வங்கி ஊழியர் உடல் உறுப்பு தானம்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி கிராமம் அரசமரத்து கரட்டூரை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் சக்திவேல் (வயது 26). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 12-ந் தேதி அன்று, 5 ரோடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் மூளைச்சாவு அடைந்து விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்துவிட்டார். இந்த நிலையில் சக்திவேலுவின் குடும்பத்தினர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பின்னர் சக்திவேலின் உடல் அரசமரத்து கரட்டூரில் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சக்திவேல் உடலுக்கு சேலம் தெற்கு தாசில்தார் செல்வராஜ், அரசு சார்பில் மாலை வைத்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி