திருச்சிக்கு வருகை தரும்
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து 250 போலீசார் திருச்சிக்கு சென்றுள்ளனர். காவல்துறை துணை ஆணையர் பிருந்தா தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகர காவல் துறையில் இருந்தும் மாவட்ட காவல்துறை சார்பில் 3 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5 ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 250 பேர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர்.