மகுடஞ்சாவடி அருகே தூய்மை பணியாளர் சாலை விபத்தில் பலி.

59பார்த்தது
மகுடஞ்சாவடி அருகே தூய்மை பணியாளர் சாலை விபத்தில் பலி.
சேலம் மாவட்டம் , மகுடஞ்சாவடி அடுத்த அ. புதூர் கிராமம் , செல்ல குட்டை வளவு பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மனைவி கோவிந்தம்மாள் (65), அதே பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மனைவி செல்லம்மாள் (55), முத்துசாமி மகன் சிவலிங்கம் (48 ) ஆகியோர் அ. புதூர் ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் குப்பைகளை பேட்டரி வண்டியில் சுண்ட மேட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கொங்கணாபுரம் பக்கம் இருந்து அதி வேகமாக வந்த, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், பேட்டரி வண்டி மீது மோதியதில் அதில் அமர்ந்திருந்த கோவிந்தம்மாள் , செல்லம்மாள் மற்றும் வண்டி ஓட்டிச் சென்ற சிவலிங்கம் ஆகிய மூவருக்கும் பலத்த அடிபட்டது. இதில் கோவிந்தம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், செல்லம்மாள் , சிவலிங்கம் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தமிழக முதல்வர் சாலை விபத்தில் பலியான தூய்மை பணியாளர் கோவிந்தம்மாள் குடும்பத்திற்கு ஆறுதலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி உதவியும் , லேசான காயம் காயமுற்ற செல்லம்மாள், சிவலிங்கம் ஆகியோருக்கு தலா ரூ 50, 000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி