பெரியார் பல்கலை; துணைவேந்தருக்கு எதிராக தொடரும் போராட்டம்.!

54பார்த்தது
ஓமலூர்; சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் பணியில் இருந்த போது பல்வேறு ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தது அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை குழு அமைக்கப்பட்டு துணைவேந்தர் ஜெகநாதன் முன்னாள் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியது.

இந்நிலையில் ஜெகநாதனின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதி முடிவுற்ற நிலையில் முன்னதாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மீண்டும் ஒராண்டு பணி நீடிப்பு வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் வாயிற் போராட்டத்தை இரண்டாவது நாளாக நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி