2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

50பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஜோடுகுளி தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்குரிய கார் ஒன்று ஓட்டல் முன்பு நின்றது. அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீவட்டிபட்டி போலீசார் டிரைவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். காரின் பின்பக்க கதவை திறந்து காண்பிக்குமாறு கூறிய நிலையில் தீடிரென டிரைவர் காரை விட்டு இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தார். பின்னர் காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு காரை சோதனை செய்தபோது காரில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி