தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (பிப்.,21) மாலை கடலூருக்குச் சென்றார். பின்னர் அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிலையில் வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (பிப்.,22) பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடைபெறுகிறது. மேலும், அரசு பள்ளி புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.