மேட்டூரில் யானை தந்தம் விற்க முயன்ற மூன்று பேர் கைது.

70பார்த்தது
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரி, காளிகவுண்டனூரில் யானை தந்தங்கள் விற்கப்படுவதாக மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று மதியம் காளி கவுண்டனூர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது யானை தந்தங்களை விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்த சேலம் வாழப்பாடியை சேர்ந்த பாலு, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சேகர், சோமசுந்தரம், ஆகிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்தவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானை தந்தம் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சேலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஐந்து பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி