மேட்டூர் அணையில் உபரி நீர் நிறுத்தம்.

77பார்த்தது
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட வந்த உபரி நீர் 8 நாட்களுக்குப் பிறகு நிறுத்தம்.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 30ஆம் தேதி எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதிகபட்சமாக உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1. 48 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைய தொடங்கியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 22, 000 கன அடியாக இருந்தது. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக 17, 500 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக 4, 500 கன அடியும் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10, 000 கன அடியாக குறைந்ததையடுத்து 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த ஒவ்வொரு நீர் 8 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி