சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரியார்
பல்கலைக்கழகத்தில் வெப் டிசைன் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சிலர் இன்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது கடந்த 2021 முதல் 2023 வரை 324 மாணவ-மாணவிகள் இந்த பிரிவில் படித்து வந்ததாகவும் அவர்களுக்கு
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரூ. 2. 66 கோடி பல்கலைகழகத்திற்கு ஒதுக்கியதாகவும் அந்த பணத்தை மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதாக கூறி வங்கி கணக்கு தொடங்கி அதன்
ஏடிஎம் கார்டுகளை 2 பேர் வாங்கி கொண்டு சில மாணவர்களுக்கு மட்டும் ரூ. 3 ஆயிரம் கொடுத்துவிட்டு ரூ. 1 கோடியை மோசடி செய்து
விட்டனர். மேலும் மாணவ-மாணவிகளிடம் வாங்கி வைத்துக்கொண்ட அசல் சான்றிதழ்களையும் தர மறுப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.