மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மேட்டூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டூர் அணை வக்கீல்கள் சங்க தலைவர் ஜேம்ஸ் சார்லஸ் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து வக்கீல்கள் ஊர்வலமாக புறப்பட்டு சின்ன பார்க், தினசரி மார்க்கெட் வழியாக தலைமை தபால் அலுவலகத்தை சென்றடைந்தனர்.
ஊர்வலத்தை வக்கீல்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் சிவராமன், பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மூத்த வக்கீல்கள் ஐ. கே. சதாசிவம், பீட்டர் ராஜ், ரங்கநாதன் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் நீதிமன்ற பணியை புறக்கணித்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி