வாகனம் மோதியதில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து காய்கறி வியாபாரி பலி

84பார்த்தது
வாகனம் மோதியதில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து காய்கறி வியாபாரி பலி
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 59). இவர் அந்த பகுதியில் சிறிய மளிகை கடை மற்றும் காய்கறி கடை நடத்தி வந்தார். மேலும் இவர் சரக்கு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்தார்.
நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி செல்வியுடன் (50), தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சரக்கு ஆட்டோவில் ஆத்தூர் வழியாக வந்து கொண்டிருந்தார். சரக்கு ஆட்டோவை கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்தார். ஆத்தூர் அருகே ராமநாதபுரம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஏதோ ஒரு வாகனம் மோதியது. இதில் ரோட்டின் இடதுபுறம் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ ஓட்டி வந்த வியாபாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவருடைய மனைவி செல்வி காயம் அடைந்து ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்திக்கு, மனைவி செல்வி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி