சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவரது மனைவி கலைவாணி, இவர்களுக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். கடந்த 19ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற கலைவாணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குணசேகரன் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து எடப்பாடி போலீசில் அவர் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாய் மகளை தேடி வருகின்றனர்.