சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சி பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை கொட்டுவதற்காக குறுக்குப்பாறையூரில் அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று 13-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போது, குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுமாறு வலியுறுத்தினர். போராட்டம் நடத்திய 36 பேரை தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் போராட்டம் நேற்று 13-வது நாளாக தொடர்ந்தது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்த பிறகு அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.