முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் நாளை (பிப்.,21) மற்றும் நாளை மறுநாள் (பிப்.,22) என இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் போது அவர் பல நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, 84 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, 61 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, உள்ளிட்ட 12,226 பயனாளிகளுக்கு ரூ.164 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நல உதவிகள் வழங்கவுள்ளார்.