அட்டை குடோனில் டிரைவர் மர்மசாவு: மின்சாரம் தாக்கி பலி?

3782பார்த்தது
சேலம் அருகே வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 26). திருமணமாகவில்லை. இவர் கந்தம்பட்டி ராஜீவ் நகரில் சுரேஷ் என்பவரது பழைய அட்டைகளை வாங்கி சேகரித்து வெளியூருக்கு மொத்தமாக அனுப்பும் குடோனில் டெம்போ டிரைவராக பணியாற்றினார். இதற்கிடையே சம்பவத்தன்று வசந்த் குடோனில் மூட்டை தூக்கும் லிப்ட் மிஷின் அருகே தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வசந்த் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வசந்த் லிப்ட் மிஷினில் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இருந்தாலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி