காட்டுமாடு முட்டியதில் விவசாயி பலி!

50பார்த்தது
காட்டுமாடு முட்டியதில் விவசாயி பலி!
விவசாய நிலத்தில் புகுந்ததை விரட்டியபோது,
காட்டுமாடு முட்டியதில் விவசாயி பலி;போலீசார், வனத்துறையினர் விசாரணை.

சேலம் மாவட்டம். வாழப்பாடி அருகே உள்ள பெரியகல்வராயன் மலை கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட குன்னூர் சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி (எ) குழந்தையன் கணேசன்(52). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் தனது நிலத்தில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளார். நேற்று தனது நிலத்திற்கு சென்ற போது, அங்கு 7 காட்டு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையன் கணேசன், காட்டு மாடுகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அதில் ஒரு காட்டுமாடு திமிறிக் கொண்டு குழந்தையன் கணேசனை நோக்கி ஆவேசமாக ஓடிவந்தது. அவர் சுதாரிக்கும் முன்பாக, பலமாக அவரை முட்டிதூக்கிவீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை கண்ட காட்டுமாடு, அங்கிருந்து ஓடி விட்டது. காட்டுமாடு தாக்கியதில் படுகாயமடைந்த கணேசனை மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கரியகோயில் போலீசார் மற்றும் கருமந்துறை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி