NIT கல்லூரிக்கு தேர்வாகிய மாணவிக்கு குவியும் பாராட்டு!

51பார்த்தது
NIT கல்லூரிக்கு தேர்வாகிய மாணவிக்கு குவியும் பாராட்டு!
சேலம் மாவட்டம், கருமந்துறை மலைவாழ் மக்கள் அதிகமாக வசித்து வரும் பகுதியான கரியகோயில், வேளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுகன்யா. கரியகோயில் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்த மாணவி மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு நிலைகளிலும் தேர்ச்சிபெற்று, சேலம் மாவட்டத்திலிருந்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரிக்கு பொறியியல் பயில தேர்வாகிய முதல் மலைவாழ் பழங்குடியின மாணவி என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி