பாரதியார் ஹைடெக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

71பார்த்தது
பாரதியார் ஹைடெக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
ஆத்தூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பாரதியார் ஹை-டெக் இன்டர்நேஷனல் சீனியர் மேல்நிலைப்பள்ளி (சி. பி. எஸ். இ. ) ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைவர் எஸ். இளவரசு, செயலாளர் டாக்டர் ஏ. கே. ராமசாமி, பொருளாளர் எஸ். ஆர். டி. செல்வமணி மற்றும் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களை சி. பி. எஸ். இ. பள்ளி முதல்வர் வி. பூங்கோதை வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆத்தூர் பி. எஸ். சுந்தரம், கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை எற்படும் விதத்தில் பேசினார். இதில், 12 மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் சாதனைகளை படைத்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பட்டது. மாணவ-மாணவிகளின் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. விழா முடிவில், சி. பி. எஸ். இ. தொடக்கப்பள்ளி முதல்வர் ஜி. ஜெயசுதா நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி