'கருணாநிதி பெயர் வைத்தால் மிகப்பெரிய போராட்டம்'

71பார்த்தது
'கருணாநிதி பெயர் வைத்தால் மிகப்பெரிய போராட்டம்'
டவுன்ஹாலில் கட்டப்படும் வரும் வளாகத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'எம்ஜிஆர்-ஐ இழிவாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து 9ஆம் தேதி அவிநாசியில் பிரம்மாண்ட முறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ரூ.1,300 கோடியில் அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட 4வது திட்டத்தை எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் வெட்கமில்லாமல் வந்து உதயநிதி திறந்து வைக்க போகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்' என்றார்.

தொடர்புடைய செய்தி