"தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்"

58பார்த்தது
"தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்"
டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமிக்க தலைமை நிர்வாகிக்கு அறிவுறுத்தி உள்ள அதிஷி, தண்ணீர் குழாய்கள் மூலம் வாகனங்களை கழுவுதல், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வீணாவது, கட்டுமான அல்லது வணிக நோக்கங்களுக்காக நீர் விநியோகத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இக்குழு கண்காணிக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி