தொடர் மழையால் அழுகிய பயிர்கள்.. விவசாயிகள் வேதனை

69பார்த்தது
தொடர் மழையால் அழுகிய பயிர்கள்.. விவசாயிகள் வேதனை
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழை காரணமாக விளைநிலத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், கேரட், வெள்ளைப் பூண்டு ஆகிய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். மேலும், “மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி