விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்.. 3 பேருக்கு கத்திக்குத்து

57பார்த்தது
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் நேற்று (செப்.17) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இதில், நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், படுகாயமடைந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மோதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி