மழையால் நாசமான நெற்பயிர்கள்.. விவசாயிகள் வேதனை

83பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொருக்கதூர், நாவல்பாக்கம், பிலாந்தி, மணலவாடி, வண்ணாந்தாங்கல், தேவநத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று (அக்.19) இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆற்றுக் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாய் உடைந்து, 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் நாசமாகின. இதனால், மனமுடைந்த விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் உள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி