மீட்பு பணியில் ஹெலிகாப்டர்!

5133பார்த்தது
மீட்பு பணியில் ஹெலிகாப்டர்!
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் கடலோர காவல் படைக்கு சொந்தமான சுஜேய், வைபவ், விக்ரம் ஆகிய 3 கப்பல்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. சுஜேய் கப்பலில் ஹெலிகாப்டர் வசதி உள்ளதால் அதன் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி