நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது 'ரீமால் புயல்'

17459பார்த்தது
நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது 'ரீமால் புயல்'
நாளை மறுநாள் (மே 25) வங்கக்கடலில் 'ரீமால் புயல்' உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது மே 26ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு 'ரீமால்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வருகிற 26ஆம் தேதி 'ரீமால் புயல்'
மேற்குவங்க பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இன்று (மே 23) நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி