ரூ.6 ஆயிரம் நிவாரணம்.. இன்றுமுதல் தொடக்கம்

74பார்த்தது
ரூ.6 ஆயிரம் நிவாரணம்.. இன்றுமுதல் தொடக்கம்
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக 4 மாவட்டங்களில் டோக்கன் விநியோகம் நடைபெற்றது. இந்நிலையில் டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்றே நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து பொங்கல் பரிசு குடுக்கும் பணிகள் இருப்பதால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி