“பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம்” - அண்ணாமலை அறிவிப்பு

79பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 20) சம்பவ இடத்திற்குச் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களது குடும்பத்தாருக்கு பாஜக சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி