ராஷ்மிகா டீப்ஃபேக் வழக்கு.. 4 குற்றவாளிகள் போலீஸ் காவலில்

1063பார்த்தது
ராஷ்மிகா டீப்ஃபேக் வழக்கு.. 4 குற்றவாளிகள் போலீஸ் காவலில்
நடிகை ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ சமீபத்தில் வைரலாகி நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் மெட்டா அமைப்பு அளித்த விவரங்களின் அடிப்படையில் 4 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். அந்த வீடியோவை தாங்கள் பதிவேற்றியதாகவும், ஆனால் அந்த வீடியோவை உருவாக்கியது தாங்கள் அல்ல என்றும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி