திருவாடானை அருகே தீயில் எரிந்த வைக்கோல் படப்பு

579பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் வீட்டின் அருகே பல ஆயிரம் செலவில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர். நேற்று வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது பிள்ளைகான  வீட்டில்  விட்டுவிட்டு அருகே உறவினர்கள் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளனர். சிறுவர்கள் வைக்கோல் படத்தின் அருகே விளையாடியதில் அதில் வைக்கோல் படப்பு எரிய தொடங்கியது.

சுதாரித்த சிறுவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் மோட்டாரை இயக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் தீயை அணைக்க முடியவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் கொடுக்க நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்படி தீயை அணைக்கும் போது கோடார் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி கலத்தில் இறங்கி உதவியது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது. தீயை அணைப்பதற்குள் பல ஆயிரம் மதிப்பான வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்தி