அய்யனார் கோயில் ஊருணியை தூா்வாரக் கோரிக்கை.!

79பார்த்தது
அய்யனார் கோயில் ஊருணியை தூா்வாரக் கோரிக்கை.!
சிறுமலைக்கோட்டையில் புதா் மண்டி கிடக்கும் அய்யனாா் கோயில் ஊருணி.

திருவாடானை அருகேயுள்ள சிறுமலைக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாா் கோயில் ஊருணியை தூய்மைப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சிறுமலைக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான அய்யனாா் கோயிலுக்கு முன் உள்ள ஊருணி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் புதா் மண்டி கிடக்கிறது.

இதனால், தண்ணீா் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊருணியை புதா்களை அகற்றி தூா்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடைய செய்தி